நெடுந்தீவு படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடமிருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. புங்குடுதீவு பகுதியிலுள்ள அமைந்துள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஜேர்மனியில் சுமார் 20 வருடங்கள் வாழ்ந்து பின்னர் நாடு திரும்பியவர்…

Read More

நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையம் ஊடாக நேற்று சனிக்கிழமை நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று (23) நடைபெறவுள்ள சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் வௌியீட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே இவர்கள் விஜயம் செய்துள்ளனர். சிவாஜி கணேசனின் வெற்றிக்கு காரணம் அவரது வசனமா அல்லது உடல் மொழியா எனும் தலைப்பில் பட்டிமன்றமும் யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

Read More

மரதன் ஓட்டப் போட்டியில் சகோதரனின் உதவிக்காக ஓடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியின் போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் பலாகல , குடாஹெட்டியாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இந்த விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இதன் போது மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் உதவிக்காக ஓடிக் கொண்டிருந்த சிறுவர் திடீரென வீதியில் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கலாவௌ கிராம…

Read More

பேர்ள் கப்பல் விவகாரம் :உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது குற்றப்புலனாய்வு பிரிவு

சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவரால் இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் நாட்டின் சமுத்திர பரப்பிற்கு ஏற்பட்ட மாசுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் அரசாங்கத்தின் உயர்…

Read More

நீர்வீழ்ச்சியில் குதித்து காணாமல் போன தாய் சடலமாக மீட்பு

குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மாலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு தனது இரு பிள்ளைகளுடன் இவர்…

Read More

கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் ஜி.வி.பிரகாஷ்

முன்னனி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக…

Read More

பெண்கள் ரமழான் பண்டிகை கொண்டாட தடை விதித்த தலிபான்கள்

ரமழான் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க பெண்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். காபுல் – ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் திகதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தானில் பெண்கள் ரமழான் கொண்டாட தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் ஏற்கனவே தடை…

Read More

இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஒலிவர் டவுடன் நியமனம்

இங்கிலாந்தின் துணை பிரதமரும்,  நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை…

Read More

டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்த பெண் மாயம்

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியின் மேற் பகுதியிலிருந்து இருந்து குதித்து காணாமல் போயுள்ளார். குடும்ப தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த குறித்த பெண் இன்று (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணைத் தேடும் நடவடிக்கையை திம்புல்ல பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Read More

பொய்யான தகவல் வழங்கியதாக கைதானவருக்கு விளக்கமறியல்

அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென பொய்யான தகவலை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயது சந்தேகநபர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்று (22) பிற்பகல் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

Read More