ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்

3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை பிரித்தானியா செல்கிறார். சுமார் 70 ஆண்டுக்காலம் ஐக்கிய இராச்சியத்தின் அரியணையை அலங்கரித்த 2ஆம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி காலமானார். அவரது மறைவின் பின்னர் இளவரசர் 3ஆவது சார்ள்ஸ் முடிக்குரிய மன்னராக அறிவிக்கப்பட்டார்.  இதன் பிரகாரம், 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு…

Read More

இந்திய விமானப்படை தளபதி இலங்கை வருகிறார்

பிராந்தியங்களுக்கிடையிலான சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள், கூட்டுப்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக திங்கட்கிழமை (மே 1) நாட்டுக்கு வருகை தரவுள்ளார். இது தொடர்பில் இலங்கை விமானப்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது: விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்புக்கமைய, இந்திய விமானப்படைத் தளபதி…

Read More

இலங்கையர்கள் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மூன்று சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்டு மெரைன் பொலிசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற் பகுதிக்கு அகதிகள் வந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் மெரைன் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பெயரில் மெரைன் பொலிசார் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு சென்று பார்க்கும் பொழுது அரிச்சல் முறை கடற்…

Read More

தமிழ் மொழியும் தமிழ் நாடும் மிகவும் பிடிக்கும் – நடிகை சம்யுக்தா

தமிழ் மொழியும், தமிழ்நாடும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார். சாய் தரம் தேஜ் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ‘விரூபாக்‌ஷா’. அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கியுள்ள இப்படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வரும் மே 5ஆம் தேதி தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. தமிழ் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம்…

Read More

ஆவணப் படமாக உருவாகும் அஜித்தின் பைக் டூர் 

நடிகர் அஜித்குமாரின் உலக சுற்றுலா ஆவணப் படமாக உருவாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் சினிமா தவிர்த்து, கார் பந்தயம், பைக் டூர், துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவர். படப்பிடிப்பு நேரம் போக அவ்வப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வது அஜித்தின் வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ‘துணிவு’ படப்பிடிப்பின் இடையே, ஐரோப்பாவில் தன் நண்பர்களுடன் பைக் டூர் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. ‘துணிவு’ படப்பிடிப்புக்கு பிறகு…

Read More

கடைசி பந்து வரை களமாடி சென்னையை வென்ற பஞ்சாப்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய…

Read More

அமெரிக்க – தென் கொரிய ஒப்பந்தம் ஆபத்தை உருவாக்கும்: கிம் சகோதரி எச்சரிக்கை

அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்கா சமீபத்தில் ஒப்புக்கொண்டது. மேலும், வட கொரியாவின் அணுசக்தி அச்சுறுத்தலை தென் கொரியா எதிர்கொள்ள அந்நாட்டை அணு ஆயுத திட்டத்திலும் அமெரிக்கா ஈடுபடுத்தி வருகிறது. தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம், இவ்வாரம் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடன், தென் கொரிய…

Read More

24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர். இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “அட்வான்டேஜ் ஸ்வீட் டேங்கர் கப்பலை, சர்வதேச கடல் எல்லையை மீறியதாகக் கூறி ஈரான் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அந்தக் கப்பலையும்…

Read More

விமானப் படை பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு இந்திய அமெரிக்கர் ராஜா ஜே சாரி பெயரை பரிந்துரை செய்தார் அதிபர் ஜோ பைடன்

இந்திய அமெரிக்க விண்வெளி வீரர் ராஜா ஜே சாரியை விமானப் படையில் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கர்னலாக இருப்பவர் ராஜா ஜே சாரி. வயது 45, விண்வெளி வீரர். இந்த இளம் வயதில், இவரை அமெரிக்க விமானப் படையில் மிக முக்கியமான பிரிகேடியர் ஜெனரல் பதவியில் நியமிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இதற்கான பரிந்துரையை அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்…

Read More

மே தின ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்தார். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்…

Read More