சிறப்பு அனுமதி பெற்று சினிமாவில் நடிக்கும் பெண் பொலிஸ் அதிகாரி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர், சிம்லா பிரசாத். கடந்த 2010ல் ஐபிஎஸ் அதிகாரியான அவர், தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். அவரது தாயார் மெஹ்ருன்னிஷா, எழுத்தாளர். தந்தை பகீரத் பிரசாத், முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு மற்றும் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சிம்லா பிரசாத், தந்தையின் விருப்பத்துக்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாலும், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ‘அலிஃப்’ என்ற படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில்…

Read More

மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி கலைப்பு

மியான்மரில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டு கடந்தாண்டு பிப்ர வரியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  இதையடுத்து, சூகி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் மீது பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அங்கு விரைவில் பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கட்சிகள் தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.இந்நிலையில், அந்நாட்டின் ராணுவ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆங் சான்…

Read More

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 86 வயது ஆகும் போப் பிரான்சிஸுக்கு அண்மை காலமாக முதுமை சார்ந்த உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருவதால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறுகள் இருப்பதை அடுத்து போப் பிரான்சிஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் போப் பிரான்சிஸுக்கு சில நாட்கள் தகுந்த…

Read More

பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: கோதுமை மாவுக்காக பாகிஸ்தான் மக்கள் மோதல்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது.

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – ஜனநாயக விரோத சட்டம்: ஜே.வி.பி

அரசாங்கம்  புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என தெரிவித்து ஜனநாயக விரோத சட்டம் ஒன்றையே வர்த்தமானி மூலம் வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் பிரகாரம் தொழிற்சங்க போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் ஊடகங்களில் அறிவுறுத்தும் ஊடகவியலாளரும் பயங்கரவாதியாகவே கருதப்படும் என மக்கள் விடுதலை முன்னணி ஊடகப்பேச்சாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் புதிய பங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்…

Read More

சாரா ஜஸ்மின் இறப்பு உறுதியானது

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மினும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்றாவது முறையாக பெறப்பட்ட நுண்ணிய மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ மாதிரிகள்…

Read More

லயோனல் மெஸ்ஸி தனது 100வது கோலை அடித்து சாதனை

நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். குராகாவ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் 100வது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை புரிந்துள்ளார். ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது.  இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின்  20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார்…

Read More

போருக்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தைக்கு சிறை

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய சிறுமியின் தந்தை ரஸ்யாவிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார். மகள் யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தைக்கு ரஸ்ய நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. எனினும் நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்தவேளை தந்தை நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை. வீட்டுக்காவலில் இருந்து அவர் தப்பிச்சென்றுவிட்டார் என நீதிமன்றத்தின்  செயலாளர் தெரிவித்துள்ளார். அவர் எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என அவரின் சட்டத்தரணி பிபிசிக்கு தெரிவித்துள்ளார். யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த குற்றச்சாட்டின் கீழ்…

Read More

பௌத்த மயமாக்கலை கண்டித்து ஒன்றிணையுங்கள்- மாவை அழைப்பு

தமிழர் பிரதேசங்களில்  ஆலயங்கள் அழிக்கப்படுவது மற்றும் பௌத்த மயமாக்குவதை கண்டித்து வியாழக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மதங்கள், கட்சிகள் கடந்து ஒன்றிணையவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளதுடன் வெடுக்கநாறிமலை ஆதிசிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…

Read More

வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதன் பின்னர் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை. சமீபத்தில் வெங்கட் பிரபு பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,…

Read More