இம்முறை ஹஜ் கடமைக்காக சென்ற மூன்று இலங்கையர்கள் அங்கு மரணித்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்ற இருவர் உயிரிழந்தனர்.
கொலன்னாவையை சேர்ந்த ஹாஜியானி ஒருவர் மாரடைப்பு காரணமாக செவ்வாயன்று (04) மக்காவில் மரணித்ததாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உறுதிப்படுத்தியது.
கொழும்பு 14-ஐ சேர்ந்த ஹாஜி ஒருவர் மதீனாவில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது மரணித்ததாக திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, குருணாகலை – பானகமுவ பகுதியை சேர்ந்த ஹாஜி ஒருவர் கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக மினாவில் உயிரிழந்துள்ளார்.
இம்முறை சுமார் 3500 பேர் ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து சென்றுள்ளனர்.

