வெங்கட் பிரபுவிடம் சான்ஸ் கேட்ட அஜித்

கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இடம் பிடித்தவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011 -ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படம் அஜித்தின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதன் பின்னர் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் இப்படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

சமீபத்தில் வெங்கட் பிரபு பல சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “சென்னை 68 வெளியான போது ஒரு புது நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது ஒரு நபர் ‘நானும் சென்னை 68 தான் நான் நன்றாக பௌலிங் போடுவேன். நல்ல பேட்டிங் ஆடுவேன், எனக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா’ என்று கேட்டார்”.

“எனக்கு முதலில் யார் என்னிடம் பேசுகிறார் என்று கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆனால் கடைசியில் எனக்கு இது அஜித் சார் என்று தெரிய வந்தது. என்னை அஜித் சார் ரொம்ப கலாய்ப்பார்” என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *