வங்கிக்குள் புகுந்த நாகம் – 5 மணி நேர போராட்டம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் வங்கிக்குள் பாம்பு ஒன்று உட்புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாம்பை அங்கிருந்து அகற்றிய சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் வங்கி பூட்டிய நிலையில் மாலை 4 மணிக்கு வங்கிக்குள் நாக பாம்பு ஒன்று உட்புகுந்துள்ளது. இதை அடுத்து அந்த பகுதி மக்கள் அங்கு ஒன்று கூடினார்.

பின்பு வங்கி முகாமையாளர் வங்கியை திறந்து அங்கிருந்து பாம்பை அகற்ற பொலிஸாருடன் இணைந்து முயற்சித்தும் பயனளிக்காத நிலையில், பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்தும் அவர்களால் அதனை பிடிக்கும் முயற்சி கைகொடுக்காத போதும் இரவு 9 மணி வரை 5 மணித்தியால போராட்டத்தின் பின்னர் பாம்பை பிடித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *