தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதனை அவதானித்த பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீதான விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

