மின்சாரசபை மறுசீரமைப்புக்கள் குறித்து ஜப்பானுடன் கலந்துரையாடல்

இலங்கை மின்சாரசபையின் தற்போதைய மறுசீரமைப்பு செயல்முறைகள் குறித்து ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துக்கு விளக்கமளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜைக்கா நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதி டெட்சுயா யமடா உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சாரசபை மற்றும் மின் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டின் தற்போதைய மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஜைக்கா வழங்கிய உதவிக்கு இதன் போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மறுசீரமைப்பு செயலகத்தை நிறுவுவதற்கும் ஜைக்கா உதவும் என அதன் பிரதிநிதிகள் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளனர். அடுத்த 12 மாதங்களில் மின்சார சபை சீர்திருத்த மாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்த குறித்த செயலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *