மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் உடல்கள் இரண்டு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்தனர்.

இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள கபுகந்த சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (31) மாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொலன்னாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த விதம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை, காலி கோட்டை கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பெண்ணுக்கு 35-40 வயது இருக்கும் என நம்பப்படுகிறது.

சடலம் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *