அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் பெ செயிண்ட் லுயிஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு இடம்பெற்ற கேளிக்கை நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந் நிகழ்வில் 15க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வில் பங்கேற்ற 19 வயது இளைஞன் ஒருவனாலேயே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 வயது இளைனும் , 16 வயது சிறுவனொருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனை கைது செய்துள்ளனர்.

