நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக மனுத்தாக்கல்

உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது தொடர்பான நிதியை முடக்குவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நிறைவேற்ற நிதியமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *