அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து இந்தியில் அறிமுகமாகிறார் நயன்தாரா.
விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் செப்டம்பர் மாதம் திரைக்குவர உள்ளது.
இந்த நிலையில் வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.
இதன் போது ரசிகரொருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஷாருக்கான் , ‘நயன்தாரா இனிமையானவர். மிகப்பெரிய அழகி. அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. விஜய்சேதுபதி திறமையான நடிகர். மிகவும் அடக்கமானவர். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஜவான் படம் பக்கா கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இயக்குனர் அட்லி இந்த படத்தில் என்னை இரண்டு விதமாக திரையில் காட்ட முயற்சி செய்துள்ளார். சில வார்த்தைகளை கொண்டு பாடவும் வைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நயன்தாராவுடன் அவரது திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை பதிவேற்றி அதிலும் அவர் நயன்தாராவைப் புகழந்துள்ளார்.


