ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பலான அகேபோனோ உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இது திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்தக் கப்பல், 150.5 மீற்றர் நீளமுடையதாகும். இக்கப்பலில் கட்டளை அதிகாரி கப்டன் ஹிசாடோ சோடோகாவா மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோர் கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நடத்தினர்.
இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது , இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது . நாளை மறுதினம் செவ்வாய்கிழமை கப்பல் நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

