சூடானில் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட 87 பேர் உடல்கள்

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும், பி.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவ படைக்கும் இடையேயான மோதல் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரமடைந்தது.

இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில் 87 பேரின் உடல்கள் ஒரே புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை வெகுஜன படுகொலை என ஐ.நா. சபை குறிப்பிட்டுள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *