சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கை சந்தித்துள்ளார்.

சீனாவில் பீஜிங் நகரித்திலேயே குறித்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (20) இடம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி  16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். 

சீன துணைப் பிரதமர் டிங் க்ஸூசியாங் மற்றும் சீன நிதி அமைச்சர் லியு குன் ஆகியோருடன் ஜனாதிபதி நேற்று கலந்துரையாடினார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து முக்கியமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *