சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பரில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *