இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா? அல்லது விபத்தா? என்பதில் சந்தேகம் உள்ளது.குற்றப்புலனாய்வுத் திணைக்களம் துரிதகரமான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
சனத் நிஷாந்தவை போன்று அரசியல்வாதிகள் அனைவரும் இறக்க வேண்டும் என 3 பேரை கொண்டவர்கள் கருதுகிறார்கள் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவுக்கான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

