கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுகின்றன – சுமந்திரன்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப் பணிகள் எதேச்சதிகாரமாக இடம்பெறுவதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது இந்த நாட்டிலே பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு சூழ் நிலையிலே, இவ்வாறான சாட்சியங்கள் கிடைக்கிறபோது, அவை மிகவும் கவனமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலே விசாரிக்கப்பட்டு, அகழ்வுகள் செய்யப்படவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *