கனாடா பொலிசாரால் தேடப்படும் இரு தமிழர்கள்

கனடாவின் – டொராண்டோவில் பொலிஸார் தேடப்படும் இரண்டு நபர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

அதன்படி 29 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் மற்றும் 30 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் ஆகியோர் துப்பாக்கியை வைத்திருந்ததாக தலா மூன்று குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மேலும் இருவரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டொராண்டோவைச் சேர்ந்த 36 வயதான ஜஹ்மல் பால்மர் மற்றும் பால் வில்லியம்ஸால் அறியப்படும் பால் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர். இதன்படி இரண்டு முக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *