ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபல இயக்குனருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல அதிர்ச்சியளிக்கும் வகையில் நகைகள் திருட்டு போயுள்ளது.

60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் திருட்டு போய் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது

பல லட்சம் மதிப்புள்ள இந்த நகைகளை அவர் வீட்டில் வேலை செய்யும் மூன்று பணியாளர்கள் தான் திருடியிருப்பார்கள் என சந்தேகித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்ததன் பெயரில் தற்போது பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *