ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

கொழும்பில் இன்று (30) நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு  நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் இருந்து பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *