ஏமனில் கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் பலி

ஏமன் நாட்டில் கூட்டநெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏமன் இஸ்லாமிய நாடு. இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் அதனையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயல கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஏமன் நாட்டின் போராட்டக்குழுவான ஹவுத்தி போராளிகள் குழு தங்களின் தொலைக்காட்சியில், அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பறிபோனதாக செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியில் ஆங்காங்கே சடலங்கள் வரிசையாக குவித்துவைக்கப்பட்டுள்ளது காட்டப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *