விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் சற்று முன்னர் புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொரளை ஜயரத்ன மல்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இருமருங்கிலும் பெருந்தொகையான மக்கள் திரண்டுள்ளதாகவும், இல்லத்திலும் பெருமளவான மக்கள் திரண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் மற்றும் பலர் நேற்று (25) இரவு பொரளை ஜயரத்ன மல்சாலைக்கு சென்று தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
மேலும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர்.
இறுதி அஞ்சலி செலுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பிற்பகல் பிரசன்னமாகியிருந்தார்.
சனத் நிஷாந்தவின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

