உயர் வெப்பநிலை !கர்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

மகளிர் மற்றும் சிறுவர் வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வழக்கமாக 2 லிட்டர் தண்ணீர் அருந்துபவர்கள் தற்போது சுமார் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது என அவர் மேலும் தெரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *