கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையவழியூடாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமானது. எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுடன் இந்த கால அவகாசம் நிறைவடையவுள்ளது.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எந்தவொரு காரணத்துக்காகவும் முதன்முறையாக பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு இந்த கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது.
எவ்வாறிருப்பினும் இரண்டாவது முறை அல்லது மூன்றாவது முறை விண்ணப்பிக்கின்ற இ கடந்த ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றி பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு மாத்திரம் இ பெறுபேறுகள் வெளியான பின்னர் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படும்.
அத்தோடு பெப்ரவரியில் பரீட்சைக்கு தோற்றியவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. எனவே ஆகஸ்ட் மாதத்தில் பெறுபேறுகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


