இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் அடைக்கப்படும் பாலஸ்தீனர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேல் பொலிஸாரால் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவரான காதர் அட்னான் (வயது 45) கடந்த 3 மாதங்களாக சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிறையில் உயிரிழந்தார்.
இது பாலஸ்தீனர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகள் காதர் அட்னான் உயிரிழந்த அடுத்த சில மணி நேரத்தில் இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தpயுள்ளனர்.
காசாவிலிருந்து 3 ரொக்கட்டுகள் வீசப்பட்டதாகவும், அவை திறந்த வெளி மைதானங்களில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு பதிலடியாக காசா நகரில் இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
அதன்பிறகும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது சரமாரியாக ரொக்கட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. அடுத்தடுத்து 22 ரொக்கட்டுகளை வீசப்பட்டுள்ளன.
அவற்றில் 6 ரொக்கட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 16 ரொக்கட்டுகள் தரையில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் இந்த ரொக்கட் தாக்குதலில் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், வெளிநாட்டவர் மூவர் 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

