ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
தலைநகர் டில்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்கூப் இந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
2020 பெப்ரவரியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீன படைகள் மோதிக்கொண்ட சம்பவத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான், கஸகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

