இலங்கையுடன் கடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ்கிளப் அறிவிப்பு

இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கதிட்டமிட்டுள்ளதாக பாரிஸ்கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான கடன்வழங்குநர்கள் குழு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே பாரிஸ்கிளப் இதனை தெரிவித்துள்ளது.

ஜப்பான் இந்திய நிதியமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதி அதன் பிரதிநிதிகளுடன் இணைந்து வியாழக்கிழமை இலங்கைக்கு கடன்வழங்கியவர்களின்   குழுவை ஏற்படுத்தியுள்ளனர் என பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

கடன்வழங்கியவர்களின் குழுக்கள் எதிர்கால கடன்நிவாரண உடன்படிக்கைக்கான வழிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு தலைமை வகிக்கவுள்ளன.

தற்போதைய உத்வேகத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ள பாரிஸ்கிளப் நியாயமான கடன்சுமை பகிர்வு வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி; செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *