இலங்கை விமானப்படையின் பாவனைக்காக இந்தியாவினால் டோனியர்-228 கடல் கண்காணிப்பு விமானமொன்றை பதிலீடாக கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று கட்டுநாயக்கவில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கக்தினால் ஓராண்டுக்கு முன் நாட்டிற்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல் கண்காணிப்பு விமானம், வருடாந்த கட்டாய பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததோடு, விமானத்தின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.


