பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ‘போயிங் 777’ ரக விமானம்இ கடந்த 4ஆம் திகதி இரவு 8 மணியளவில், வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து லாகூர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியிருக்க வேண்டும்.
எனினும் விமான நிலையத்தை நெருங்கியபோது, கனமழை பெய்து கொண்டிருந்தமையால் தரையிறங்க முடியவில்லை.
கனமழையாலும், குறைவான உயரத்தில் பறந்ததாலும் விமானி பாதையை தவற விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பதானா பொலிஸ் நிலையம் வழியாக விமானம் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்துள்ளது.
பின்னர் மீண்டும் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் விமானம் சென்றுள்ளது. குறித்த பாகிஸ்தான் விமானம், சுமார் 10 நிமிடம் இந்திய வான்பகுதியில் 120 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது.

