ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 58-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 12-வது இடமும் வகிக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார்.

இதில் பிரியன்ஷு ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் பிரியன்ஷு ரஜாவத், சீன தைபேவின் சி.யு.ஜென்னுடன் மோதுகிறார். சி.யு.ஜென் தனது 2வது சுற்றில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத்தை 21-15, 21-19 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *