ஓவ்கடோக், மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இராணுவ வீரர்களை குறிவைத்தும், அப்பாவி பொதுமக்களை தாக்கியும் அங்கு கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க இராணுவத்தினர் முகாமிட்டு தாக்குதலை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நாட்டின் தலைநகரான ஓவ்கடோக்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமைஅ இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். இந்த இராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 33 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த நாட்டின் இராணுவம் அறிக்கையொன்றுக்கூடாக தெரிவித்துள்ளது.
அதேபோன்று 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

